புதிய உச்சத்தில் தங்கம் விலை - 1 சவரன் ரூ.31,720-க்கு விற்பனை
" alt="" aria-hidden="true" />

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.25 ஆயிரம் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை கடந்தது.




 

அதன்பின்னரும், விலை அதிகரித்து கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத உயர்வுக்கு சென்றது. அவ்வப்போது விலை சற்று குறைந்தாலும், ராக்கெட் வேகத்தில் மீண்டும் விலை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.




 

அதிலும், இந்த மாத தொடக்கத்தில் இருந்தேவிலை உயர்வை சந்தித்து வந்த தங்கம், நேற்று புதிய உச்சத்தையும் தொட்டு இருக்கிறது.

 

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 926-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 408-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.39-ம், பவுனுக்கு ரூ.312-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 965-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசும், கிலோவுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் 51 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

து.

Popular posts
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
Image
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து 2 பேர் பாலி 11 பேர் காயம்
Image
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
கொரோனா வைரசால் மக்கள் மடிகிறார்கள்.. இது பொருளாதார பயங்கரவாதம்.. அமெரிக்காவை கை காட்டும் ஈரான்
Image