ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரெயில் தடம்புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிட்னியில் இருந்து 153 பயணிகளுடன் மெல்போர்ன்நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில், வாலன் நகர் அருகே தடம்புரண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.